Home செய்திகள் அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்…கர்நாடக அரசு உத்தரவு…!!!

அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்…கர்நாடக அரசு உத்தரவு…!!!

by Sathya Deva
0 comment

கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத்தில் குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர். பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன் பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள் சாப்பிடும் முன்பே ஊழியர் எடுத்தது உள்ளார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.