அங்கன்வாடி ஊழியர்கள் சஸ்பெண்ட்…கர்நாடக அரசு உத்தரவு…!!!

கர்நாடகாவில் கொப்பல் மாவட்டத்தில் குண்டூர் கிராமத்தில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் உள்ள மாணவர்களுக்கு உணவோடு முட்டை பரிமாறப்பட்டுள்ளது. இதனை ஊழியர்கள் போட்டோ எடுத்துள்ளனர். பின்பு மாணவர்கள் சாப்பிடுவதற்கு முன்பு பிரார்த்தனை செய்கிறார்கள். அதன் பின் தட்டில் இருந்த முட்டைகளை மாணவர்கள் சாப்பிடும் முன்பே ஊழியர் எடுத்தது உள்ளார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து, அங்கன்வாடி ஊழியர்களான லட்சுமி, ஷைனஜா பேகம் ஆகியோரை கர்நாடக அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது. அங்கன்வாடி மையங்களில் மாணவர்களுக்கு கட்டாயம் முட்டை வழங்கவேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!