அதிபர் ஜோ பைடன்… கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்…!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடந்த 17ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் இவர் டெலாவேரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் அவரது டாக்டர் கெவின் ஓ கானர் கூறும் போது அதிபர் ஜோ பைடனுக்கு ஆன்டிஜென் சோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து உள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.இதனை அடுத்து ஜோ பைடன் அவர்கள் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். அவர் கூறும் போது நான் நன்றாக உணர்கிறேன் என்று தெரிவித்தார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!