Home செய்திகள்உலக செய்திகள் அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்… புதிதாக களமிறங்கிய கமலா ஹர்ரிஸ்….!!!

அதிபர் தேர்தலில் இருந்து விலகிய ஜோ பைடன்… புதிதாக களமிறங்கிய கமலா ஹர்ரிஸ்….!!!

by Sathya Deva
0 comment

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 5 ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வெற்றியாளராக அதிபர் ஜோப் பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹர்ரிஷ் களம் காண்கின்றார்கள். மேலும் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார். ஜோ பைடனுக்கு துவக்கம் நாளில் இருந்து அமோகமான வரவேற்பு கிடைக்கவில்லை மேலும் அவரது உடல் நிலையும் அவருக்கு எதிராக இருந்தது. இவரின் நேரடி வாதத்தில் இந்த விஷயம் பொது வெளியில் அம்பலமானது.

இந்நிலையில் அதிபர் தேர்தலில் இருந்து விலகி கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதற்கு பதிலாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராக கமலா ஹர்ரிஸ் அவர்களை ஜோ பைடன் தெரிவித்தார். அவர் தனது இணையதள பதிவில் “ஜனநாயக கட்சினரே எனது வேட்பு மனுவை ஏற்க வேண்டாம் எனவும் எஞ்சிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹர்ரிஸ்க்கு என் முழு ஆதரவு ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயக வாதிகள் ஒன்று கூடி ட்ரம்ப்பை தோற்கடிக்க வேண்டிய நேரம் இது இதை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.