அரசு தொலைத்தொடர்பு சேவை…பி.எஸ்.என்.எல் 5ஜி விரைவில்…!!!

அரசின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் விரைவில் 5ஜி மற்றும் விரிவு படுத்தப்பட்ட 4ஜி சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. தற்போது 5ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதி ராதித்ய சிந்தியா பி.எஸ்.என்.எல் 5ஜி -யை பயன்படுத்தி வீடியோ கால் சேவையை முதல்முறையாக பரிசோதித்துப் பார்த்தார். டெல்லியில் உள்ள சி- டாட் கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

இதனை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் அதில் பகிரப்பட்ட அமைச்சரின் வீடியோ கால் காணொளியும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சேவைக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 82 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை அதிகரித்து வரும் நிலையில் அனைவரின் பார்வையும் பி.எஸ்.என்.எல் பக்கம் திரும்பி உள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!