‘அற்புதமான – தரமான படம்’… “வாழை” படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இதனைதொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். பின்னர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது. இவர் ”வாழை” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த், ”மாரி செல்வராஜ் இயக்கிய வாழை படம் பார்த்தேன். இந்த படம் அற்புதமான, தரமான படம். தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு அற்புதமான திரைப்படம் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் எனவும், மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களும்” என தெரிவித்துள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?