அலட்சியமாக குரங்குடன் ரீல்ஸ்…. 6 செவிலியர்கள் அதிரடி சஸ்பெண்ட்….!!

உத்திர பிரதேசம் மாநிலம் அரசு மகளிர் மருத்துவமனையில் சீருடை அணிந்து மகப்பேறு பிரிவில் பணியில் இருக்கும் போது அங்கு வந்த குரங்குடன் விளையாடி செவிலியர்கள் வீடியோ எடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த மருத்துவக் கல்லூரி இயக்குனர் அவர்கள் 6 செவிலியர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் பணியில் இருக்கும் போது அலட்சியம் காட்டுவதற்காகவும், மருத்துவக்கல்லூரி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காகவும் இந்த 6 செவிலியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஐந்து மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!