ஆந்திர மாநிலம் அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள Escientia என்கிற மருந்து நிறுவனத்தில் அணு உலை வெடித்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நேரில் சென்று தைரியம் கொடுத்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த விபத்தினால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி இழப்பீடும் காயமடைந்த குடும்பங்களுக்கு ₹50 லட்சம் மற்றும் சிறுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 25 லட்சமும் நிவாரண வழங்கப்படுவதாக கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.