Home செய்திகள் ஆந்திர மாநிலம்…அண்ணா கேண்டீன்கள் திறப்பு…ரூபாய் 5க்கு உணவு சந்திரபாபு நாயுடு உத்தரவு…!!!

ஆந்திர மாநிலம்…அண்ணா கேண்டீன்கள் திறப்பு…ரூபாய் 5க்கு உணவு சந்திரபாபு நாயுடு உத்தரவு…!!!

by Sathya Deva
0 comment

ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலின் போது தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைத்தால் மீண்டும் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு வாக்குறுதி அளித்தார். எனவே அந்த வாக்குறுதியின் படி ஆந்திராவில் இன்று 14 மாவட்டங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. அந்த கேண்டீன்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 5 ரூபாய்க்கு அறுசுவை உணவு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் இங்கு தினமும் ஒரு லட்சம் பேர் உணவு சாப்பிடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இங்கு வழங்கப்படும் உணவானது தரமாகவும் சுவையாகவும் வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மாநிலம் முழுவதும் பல இடங்களில் அண்ணா கேண்டீன்கள் திறக்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.