உத்திரபிரதேச மாநிலம்…புதைக்க பட்டவர் தெரு நாய்களால் உயிர் பெற்ற அதிசயம்….!!!

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ரூப் கிஷோர் என்பவர் இருந்து வருகிறார். அவர் கடந்த மாதம் 18 ஆம் தேதி அன்று ஆர்டோனி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தன்னை அங்கிருந்து கௌரவ், கரண், ஆகாஷ் என நாலு பேர் நிலம் தகராறு காரணமாக தாக்கியதாக குற்றம் சாட்டினார். அவர்கள் நான்கு பேரும் கிஷோரின் கழுத்தை நெரித்ததால் அவர் இறந்துவிட்டார் என்று கருதி அவர்கள் பண்ணையில் கிஷோரை புதைத்தனர். அந்த இடத்தில் தெரு நாய்கள் கூட்டம் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி உள்ளது. அப்பொழுது கிஷோரின் சதையை நாய்கள் கடித்ததில் அவர் திடீரென சுயநினைவு பெற்றார்.

இதனால் அங்கிருந்து எழுந்த அவர் அப்பகுதியில் இருந்து வெளியேறி உள்ளூர் வாசிகள் உதவியுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என கூறப்படுகிறது. இது குறித்து கிஷோரின் தாய் கூறுகையில் நான்கு பேர் தனது மகனை வலுக்கட்டாயமாக வீட்டிலிருந்து அழைத்து சென்றனர் என குற்றம் சாட்டினார். மேலும் போலீசார் அந்த நான்கு பேரை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நிலத்தகராறு காரணமாக புதைக்கப்பட்ட வாலிபர் ஒருவர் தெரு நாய்களால் உயிர் பிழைத்த அதிசயம் அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!