Home » உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…? பொது மக்களின் கோரிக்கை…!!

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பங்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…? பொது மக்களின் கோரிக்கை…!!

by dailytamilvision.com
0 comment

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளச்சேரியில் இருந்து கோரையாறு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த சாலை வழியாகத்தான் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையின் இரு புறமும் இருக்கும் இரண்டு மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் இருக்கிறது.

எப்போது வேண்டுமானாலும் மின்கம்பங்கள் விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். மேலும் மழைக்காலம் தொடங்க வாய்ப்பு இருப்பதால் பலத்த காற்றினால் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்து விபரீதம் ஏற்படும். எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்கள் நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.