Home செய்திகள் எந்த அதிகாரத்தில் உள்ளே சென்றார்… த.பெ.தி.க. உறுப்பினர் மீது வழக்குப்பதிவு… நீதிபதி அதிரடி உத்தரவு…!!

எந்த அதிகாரத்தில் உள்ளே சென்றார்… த.பெ.தி.க. உறுப்பினர் மீது வழக்குப்பதிவு… நீதிபதி அதிரடி உத்தரவு…!!

by Revathy Anish
0 comment

மக்கள் அனைவரையும் கவர்ந்த சுற்றுலா தளமாக திகழ்வது கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம். தற்போது ஈஷாவில் முறையான அனுமதியுடன் எரிவாயு மயானம் ஒன்றினை நிறுவ திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்கும் விதமாக பலரும் செயல்பட்டு வருகின்றனர். ஆகையால் ஈஷா மயான கட்டுமான பகுதிக்குள் அனுமதி இன்றி எவரும் நுழையக்கூடாது என கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் நீதிமன்ற உத்தரவை மீறி தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர் ராமகிருஷ்ணன் உண்மையை கண்டறியும் குழு என்ற பெயரில் மயான கட்டுமான பகுதிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவரை உள்ளே விட மறுத்ததால் ராமகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கோவை நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ராமகிருஷ்ணன் மயான கட்டுப்பாட்டு பகுதிக்குள் அந்த அதிகாரத்தின் அடிப்படையில் சென்றார் என கேள்வி எழுப்பினர். மேலும் தந்தை பெரியார் திராவிட கழக உறுப்பினர் ராமகிருஷ்ணனின் மீது போலீசார் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.