ஒரு பல் மருத்துவர் இப்படியா பண்ணனும்?…. விசாரணையில் வெளியான திடுக்கிடும் உண்மைகள்…. போலீஸ் அதிரடி ஆக்சன்….!!!!

விருதுநகர் அருகிலுள்ள தனியார் கல்லூரி பகுதியில் போதை மாத்திரைகளை வைத்து இருந்ததாக சொல்லி சொக்கலிங்காபுரத்தில் வசித்து வரும் யோகராஜ் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சத்யா நகரை சேர்ந்த கோவிந்தராஜ் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பாட்டக்குளத்தை சேர்ந்தவர் தான் பல் டாக்டர் வெங்கடேஸ்வரன்(32). இவர் ராமகிருஷ்ணபுரத்தில் பல் ஆஸ்பத்திரியும், மருந்து விற்பனை கடையும் வைத்திருக்கிறார்.

மேலும் டாக்டர் வெங்கடேஸ்வரன் கடையில் இருந்துதான் அந்த மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. உடனே பல் டாக்டர் வெங்கடேஸ்வரனை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரது கடையிலிருந்து 75 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதுமட்டுமின்றி அவரது பல் ஆஸ்பத்திரிக்கும், மருந்து விற்பனை கடைக்கும் சீல் வைத்தனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!