செய்திகள் மாநில செய்திகள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை…. நள்ளிரவில் நடந்த பயங்கரம்….!! Inza Dev9 July 2024051 views உத்திர பிரதேசம் மவுஜகிராமத்தை சேர்ந்தவர் முன்ஷி அவருடைய மனைவி தேவந்தி. இவர்களுக்கு ராமசிஷ் ,ஆசிஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளன .நேற்று முன்தினம் இளைய மகன் வெளியே சென்றிருந்த நிலையில் இவர்கள் மூவரும் மட்டும் வீட்டின் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது நள்ளிரவில் ஆயுதங்களோடு வந்த மர்ம நபர்கள் மூன்று பேரை கழுத்தை அறுத்து கொலை செய்து தப்பி சென்றனர் . அதன் பிறகு வீடு திரும்பிய இளைய மகன் தன் குடும்பத்தினரை ரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்கலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இத்தகைய கொடூரத்தை செய்தவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.