ஒலிம்பிக்போட்டி…. வில்வித்தையில் ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி…!!!

பாரிசில் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கான முதன்மை சுற்றுகள் 30ஆம் தேதி தொடங்குகின்றன. இன்று தரவரிசை பெறுவதற்கான சுற்று நடைபெற்றது. ஒவ்வொரு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 72 அம்புகள் எய்த வேண்டும் என கூறப்பட்டது. அதன் புள்ளிகள் அடிப்படையில் தரவசை கொடுக்கப்படும் எனவும் தனிநபர் புள்ளிகள் அணிகள் மற்றும் கலப்பு அணிகளுக்கு அப்படியே சேர்க்கப்படும் என கூறப்படுகிறது.

இன்று மதியம் பெண்களுக்காக போட்டி நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனைகள் நாலாவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றனர். ஆண்களுக்கான வில்வித்தை போட்டி நடைபெற்றது அதில் இந்தியாவில் பொம்மாதேவரா 681 புள்ளிகளும், தருண் தீப் ராய் 674 புள்ளிகளும், பிரவீன் ரமேஷ் ஜாதவ் 658 புள்ளிகளும் மொத்தமாக 2013 புள்ளிகளை பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளனர். இதனால் ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி அடைந்தது. மேலும் தென்கொரியா 2049 புள்ளிகள் உடன் முதலிடத்தையும், பிரான்ஸ் 2025 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்தது என கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!