காசாவில் உள்ள குழந்தைகள் போலியவால் பாதிக்கப்படும்அபாயம்…சுகாதார அமைச்சகம்….!!!

பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது உணவு, தண்ணீர் பற்றாக்குறையால் காசா மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் காசாவில் உள்ள குழந்தைகள் போலியவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறும் போது காசாவில் கழிவு நீர் மாதிரிகளின் தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது என கூறியுள்ளார். இதனால் உலக சுகாதார நிறுவனம் காசாவிற்கு ஒரு மில்லியன் போலிய தடுப்பூசிகளை அனுப்புகிறது. இந்த தடுப்பூசிகள் குழந்தைகளை சென்றடைவதே உறுதி செய்ய போர் நிறுத்தம் தேவை என்றார். காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது போலியோ தொற்று நோய் பரவுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!