காரில் வந்து கைவரிசை காட்டும் பெண்…. பூஜை செய்வதாக கூறி பெண்களிடம் மோசடி…. பரபரப்பு சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள நல்லவன்பாளையம், காஞ்சி, பெரிய கிளாம்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் பெண்களை குறி வைத்து குடும்ப விஷயங்களை தெரிந்து கொண்டு மர்ம பெண் ஒருவர் உறவினர் போல பேசி நகைகளை திருடி செல்கிறார். அந்த மர்ம பெண் குடும்ப பிரச்சினைகளை தீர்க்க சிறப்பு பூஜைகள் செய்வதாக கூறி நகை மற்றும் பணத்தை திருடி செல்வதாக காவல் நிலையங்களில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அரியாங்குப்பம் கிராமத்தில் லலிதா என்பவர் தனிமையில் வசித்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி காரில் வந்த மர்ம பெண் லலிதாவிடம் குடும்ப உறுப்பினரின் பெயரை சொல்லி அவர் தான் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் கூறியபடி லலிதா 10 பவுன் நகைகளை சாமி படத்திற்கு முன்பு வைத்துள்ளார்.

பின்னர் அந்த பெண் கற்பூரம் ஏற்றி சாமி படத்திற்கு காண்பித்து விட்டு வெளியே வந்துள்ளார். இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு அந்தப் பெண் காரில் தப்பி சென்றார். இதுகுறித்து லலிதா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம பெண்ணை தேடி வருகின்றனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!