Home » கார் மோதிய விபத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பரிதாப பலி.‌‌.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

கார் மோதிய விபத்தில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பரிதாப பலி.‌‌.. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

by dailytamilvision.com
0 comment

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் அளாவூர் நாகராஜ்‌‌ (55). இவர் வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலரும் ஆவார். இவர் நேற்று சென்னை செம்பாக்கத்தில் உள்ள சாலையோர தள்ளுவண்டி கடையில்  நண்பர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் தன்னுடைய காரை எடுத்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கார் மோதிய விபத்தில் நாகராஜ் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த நாகராஜை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகராஜ் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்து தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.