காவிரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல்…. போலீஸ் கைது நடவடிக்கை…. திருவாரூரில் பரபரப்பு….!!!!!

சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச்செயலாளர் வி.கே.வி. துரைசாமி போன்றோர் தேசிய கொடி ஏந்தி நேற்று காலை 10 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் மற்றும் நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த நிலையில் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் ருக்மணி பாளையம் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்பின் மறியலில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தானது பாதிக்கப்பட்டது.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!