குவைத்தில் தீ விபத்து… கேரளா சேர்ந்த 4 பேர் பலி….!!!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள நீராட்டுபுரம் பகுதியை சேர்ந்தவர் மேத்யூஸ் முலக்கல் இவரது மனைவி லினி ஆபிரகாம். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் குவைத்தில் உள்ள அம்பாசியா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இருவரும் குவைத்தில் பணியாற்றுகின்றனர். அவர்களது குழந்தைகள் குவைத்தில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுமுறையின் போது கேரளாவுக்கு சென்று வருவது வழக்கம். அதேபோல் கேரளாவுக்கு சென்று சில நாட்கள் அங்கு இருந்துள்ளார். பின்பு பள்ளி விடுமுறை முடிந்ததை ஒட்டி குவைத்துக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் 4 மணி அளவில் அடுக்கு மாடியில் உள்ள அவர்கள் வீட்டிற்கு சென்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர் . அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் படுக்க அறையில் தூங்கி கொண்டிருந்த அவர்கள் அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்ததை பார்த்து எழுந்துள்ளனர். ஆனால் அவர்களால் வெளியே வர முடியவில்லை என்பதால் 4 பேரும் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணை செய்த போது ஏ.சி யில் எற்ப்பட்ட பழுது காரணமாக தீ விபத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சொந்த ஊரிலிருந்து நேற்று மாலை 4 மணிக்கு தான் குவைத் சென்றிருக்கிறார். இந்நிலையில் 8:00 மணிக்கு அவர்கள் 4 பேரும் பலியானார். இந்த சம்பவம் கேரளாவில் உள்ள அவர்களது குடும்பத்தார் மற்றும் உறவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!