கேரள மாநிலம்…மனைவி மற்றும் மாமியாரை கோடரியால் வெட்டிய கணவன்…!!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி செல்மா இவர்களது மகன் பஹத் ஆவர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு கண்ணூர் மாவட்டம் அருகே அவரது தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார். தன்னுடன் மகனையும் அழைத்து கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் செல்மாவின் தாய் வீட்டிற்கு சாகுல் ஹமீது சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த சாகுல் ஹமீது தன் மனைவி மற்றும் மாமியாரை கோடரியால் வெட்டினார் என கூறப்படுகிறது. இதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர் தனது மகனையும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய் மற்றும் மகள் இருவரின் உடல்களை மீட்டு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!