செய்திகள் மாநில செய்திகள் கைகோர்த்தபடி தற்கொலை…. தந்தை மகனின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!! Inza Dev10 July 2024051 views மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாயந்தர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் தந்தை மகன் என இருவர் ரயில் முன்பு விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தந்தையும் மகனும் கைகோர்த்தபடி ஆள் நடமாட்டம் இல்லாத பிளாட்பாமில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென ரயில் வரும் டிராகில் முன்பு சென்று அமர்ந்து கொண்டனர். ரயில் மிக அருகில் வந்து விட்டதால் நிறுத்த முடியாமல் அவர்கள் மீது ஏறி சென்றது . இந்த சம்பவம் அங்கிருந்த cctv காட்சியில் பதிவாகியுள்ளது. தந்தையும் மகனும் இத்தகைய முடிவு எடுத்ததற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .