சினிமா செய்திகள் செய்திகள் கொலை வழக்கு சிக்கிய நடிகர்…. கைது செய்த போலீஸ்…. பாராட்டு தெரிவித்த நடிகை….!! Gayathri Poomani16 June 2024013 views சித்ரதுர்காவில் வசித்து வந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் என 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கொலை கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் நடிகர் தர்ஷன் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடும் பழக்கம் கொண்டவர் என பிரபல நடிகை திவ்யா ஸ்பந்தனா தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து நடிகர் தர்ஷனுக்கு பெரும் செல்வாக்கு இருப்பதாக வெளியில் காட்டப்பட்டு வருகின்ற நிலையில் அப்படி எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தர்ஷன் தேர்தலில் பிரச்சாரம் செய்த வேட்பாளர்கள் தோல்வியத்தான் தழுவி இருக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் , இதற்கு முன்பாக தர்ஷனை கைது செய்த போலீசை நடிகை திவ்யா பாராட்டி உள்ளார்.