Home சினிமா செய்திகள் “கோப்ரா” படத்தை அதிருப்தியுடன் தான் இயக்கினேன்… இயக்குனர் அஜய் ஞானமுத்து…!!!

“கோப்ரா” படத்தை அதிருப்தியுடன் தான் இயக்கினேன்… இயக்குனர் அஜய் ஞானமுத்து…!!!

by Sowmiya Balu
0 comment

இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமான்டி காலனி என்ற படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். இதனை தொடர்ந்து இமைக்கா நொடிகள், கோப்ரா என இரண்டு படங்களை இவர் இயக்கினார். இமைக்கா நொடிகள் ஓரளவு வரவேற்பு பெற்றது. ஆனால் கோப்ரா படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. தற்போது இவர் டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார்.

\இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்ட இவர் கோப்ரா படம் தோல்வியடைந்தது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, கோப்ரா படத்திற்கான கதையை தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் அந்த கதை அவரை கவரவில்லை. பின்னர் அவரே எனக்கு வேறு ஒரு கதையை கொடுத்து இதை பண்ணுங்கள் என கூறினார்.

எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பல மாதங்கள் சென்று விட்டதால் திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்து இந்த படத்தை உருவாக்கினோம். படத்தின் மையக்கரு பலவீனமாக இருந்ததால் படத்தை காப்பாற்ற முடியவில்லை. மேலும் அ”திருப்தியுடன் தான் நான் அந்த படத்தை இயக்கினேன். பின்னால் தான் இந்த படத்தை நாம் இயக்கி இருக்கக் கூடாது என உணர்ந்தேன்” என மனம் திறந்து பேசியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.