செய்திகள் மாநில செய்திகள் சகோதரி வாங்கிய கடன்…குழந்தையை விற்ற அதிர்ச்சி சம்பவம்…! Sathya Deva14 July 2024083 views கர்நாடகா மாநிலம் தும்புரை சேர்ந்த பெண் ஒருவர் தனது 11 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் தனது மகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால் அவரை தனது சகோதரியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். விடுமுறை முடியும் கட்டத்தில் மகளை அழைக்க சென்ற தாய்க்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வீட்டிற்கு விருந்தாளியாக வந்த 11 வயது சிறுமியை தனது சகோதரியின் மகள் என்று கூட பாராமல் அந்த பெண் 35,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். தான் கொடுக்க வேண்டிய கடனை அடைக்க சிறுமியை அந்த ஊரில் உள்ள பண்ணையார் ஒருவரிடம் விற்றுள்ளார். சிறுமியின் தாய் சென்று தனது மகளை தன்னுடன் அனுப்புமாறு கேட்டபோதும் அவர் தன் பணத்தை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் பணத்தை கொடுத்துவிட்டு மகளை அழைத்து செல்லலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் சிறுமியை மீட்டு தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.