சபரிமலை ஐயப்பன் கோவில்…நடைதிறப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு காலங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் தெரிந்துள்ளது. கோவிலில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார் என கூறப்படுகிறது .

மேலும் நாளை (17-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜை வழிபாடுகள் நடைபெருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் நாளை முதல் வருகிற 21-ந்தேதி வரை சாமி தரிசனம் செய்யலாம் என்றும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!