சபரிமலை ஐயப்பன் கோவில்…நிறை புத்தரிசி பூஜை நடைபெற இன்று நடைதிறப்பு …!!!

நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்கு வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்படும். இந்த ஆண்டிற்கான நிறைப்புத்தரசி பூஜை நாளை நடக்கிறது. எனவே கோவில் நடை சாஸ்திரி மகேஷ் நம்பூதிரி ஆகஸ்ட் 12 மாலை 5 மணிக்கு திறந்து வைக்கிறார் எனக்கு கூறப்படுகிறது. கோவிலில் காலை 5:45 மணியிலிருந்து 6.30 மணிக்குள் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுவதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக அச்சங்கோவில் மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டுவரப்படுகின்றன.

அப்போது பூஜைக்குப் பிறகு பக்தர்கள் அனைவருக்கும் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்படும். அதன் பின்பு இரவு 10 மணிக்கு கோவில் நடை மூடப்படும் என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஆவணி மாத பூஜை வருகிற 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ஆம் தேதி மாலை திறக்கப்படும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மாதாந்திர பூஜை காலத்தில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!