Home செய்திகள் சலவை இயந்திரத்தில் இருந்த பாம்பு …அதிர்ச்சியான மக்கள்…!!!

சலவை இயந்திரத்தில் இருந்த பாம்பு …அதிர்ச்சியான மக்கள்…!!!

by Sathya Deva
0 comment

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் டெக்னீசியனாக இருந்து வருகிறார். அப்போது கடம்பேரி பகுதில் உள்ள பாபு என்பவரின் வீட்டில் சலவை இயந்திரத்தை பழுதுபார்க்க சென்றுள்ளார். அங்கு அவர் இயந்திரத்தை இயக்க முயன்ற போது உள்ளே ஏதோ ஒன்று சூழல்வதை கண்டார். அது துணி என்று நினைத்து அதை எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரிய வந்தது.

இதனால் ஜனார்த்தனன், பாபு ஆகியவர் அதிர்ச்சடைந்தனர். கடந்த இரண்டு வாரமாக சலவை இயந்திரம் பழுதடைந்து அதை பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் பாம்பு புகுந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை என பாபு கூறினார். இதை பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாபகமாக பிடித்தனர். வனத் துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப் பாம்பாகும் என்றும் அது வடிகால் குழாய் வழியாக வந்தது புகுந்திருக்கலாம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பை  ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.