சலவை இயந்திரத்தில் இருந்த பாம்பு …அதிர்ச்சியான மக்கள்…!!!

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவர் டெக்னீசியனாக இருந்து வருகிறார். அப்போது கடம்பேரி பகுதில் உள்ள பாபு என்பவரின் வீட்டில் சலவை இயந்திரத்தை பழுதுபார்க்க சென்றுள்ளார். அங்கு அவர் இயந்திரத்தை இயக்க முயன்ற போது உள்ளே ஏதோ ஒன்று சூழல்வதை கண்டார். அது துணி என்று நினைத்து அதை எடுக்க முயன்றார். அப்போது அது பாம்பு என்பது தெரிய வந்தது.

இதனால் ஜனார்த்தனன், பாபு ஆகியவர் அதிர்ச்சடைந்தனர். கடந்த இரண்டு வாரமாக சலவை இயந்திரம் பழுதடைந்து அதை பயன்படுத்தாமல் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதற்குள் பாம்பு புகுந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை என பாபு கூறினார். இதை பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாபகமாக பிடித்தனர். வனத் துறையினர் கூறும்போது பிடிபட்டது நாகப் பாம்பாகும் என்றும் அது வடிகால் குழாய் வழியாக வந்தது புகுந்திருக்கலாம் என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியை பரபரப்பை  ஏற்படுத்தியது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!