Home செய்திகள்உலக செய்திகள் சுதந்திர தின விழா…பல்வேறு தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிய விபரம்…!!!

சுதந்திர தின விழா…பல்வேறு தலைவர்கள் தேசிய கொடியை ஏற்றிய விபரம்…!!!

by Sathya Deva
0 comment

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கெடாவில் உள்ள நாடியாத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் தேசியக்கொடி ஏற்றினார்.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தேசியக்கொடி ஏற்றினார். டெல்லியில் உள்ள AICC தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக் கொடியேற்றினார். சுதந்திர தினத்தை முன்னிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ஒடிசாவில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் கலையை உருவாக்கினார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.