சினிமா செய்திகள் தமிழ் சினிமா சூப்பர்! ” டிமான்டி காலனி 2″ படத்தில் இந்த விஷயம் இருக்கா? சூப்பர் தகவல் சொன்ன இயக்குநர்…!!! Sowmiya Balu15 August 2024019 views தமிழ் சினிமாவில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் டிமான்டி காலனி. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இசையமைக்கும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் விநியோகம் செய்கிறது. இந்த படம் இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீசாகியுள்ளது. இந்நிலையில், இந்த படம் குறித்து நடிகர் அருள்நிதி, இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும்போதே 3,4 பாகங்களுக்கான கதையை இயக்குனர் அஜய் ஞானமுத்து தயார் செய்து விட்டார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் அடுத்தடுத்த பாகங்களை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக சூப்பரான தகவலை கூறியுள்ளார்.