Home செய்திகள் செல் போனில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்…போலீசாரால் கைது …!!!

செல் போனில் 3 முறை தலாக் கூறி விவாகரத்து செய்த கணவன்…போலீசாரால் கைது …!!!

by Sathya Deva
0 comment

ராஜஸ்தான் மாநிலம் சுருவை சேர்ந்தவர் ரெஹ்மான்- ஃபரிதா பானோ. இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்து ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரெஹ்மான் வேலைக்காக குவைத் சென்றிருந்தார். குவைத்தில் வேலைபார்த்துக் கொண்டிக்கும்போது மேவிஷ் என்ற பாகிஸ்தான் பெண்மணியுடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். மனைவிக்கு போன் செய்து அதன் மூலம் மூன்று முறை தலாக் கூறி மனைவிக்கு விவாகரத்து வழங்கியுள்ளார். அதன்பின் பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

பாகிஸ்தான் பெண் கடந்த மாதம் சுருவில் உள்ள ரெஹ்மான் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து ஃபரிதா பானோ காவல் நிலையம் சென்று தனது கணவர் போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து எனத் தெரிவித்துள்ளார். மேலும், வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தினர் என புகார் அளித்துள்ளார். இந்த புகார் அடிப்படையில் போலீசார் வழக்கப்பதிவு செய்தனர். இந்த நிலையில் குவைத்தில் இருந்து நேற்று வந்த ரெஹ்மானை போலீசார் கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.