செவ்வாய் கிரகத்தில் பாறை உள்ளதா..? நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!

அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட “பெர்சிவியரன்ஸ்” என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த நிலையில் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான நெரெட்வா வாலிஸ் -ன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும்போது அம்பு முனை வடிவ பாறையை கண்டெடுத்ததாக நாசா இணையை தளத்தில் தெரிவித்துள்ளது. அந்தப் பாறையில் வெள்ளை கால்சியம் சல்பைட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளைப் பிளவுகள் இருப்பது தெரிந்ததாக நாசா கூறியுள்ளது. இந்த பாறையானது பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணியிர்கள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறினார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!