Home » டாப் ஸ்டார் : சில்க் சுமிதாவின் நிறைவேறாத ஆசை. அதிர்ச்சியில் உறைந்த நிருபர்!

டாப் ஸ்டார் : சில்க் சுமிதாவின் நிறைவேறாத ஆசை. அதிர்ச்சியில் உறைந்த நிருபர்!

by dailytamilvision.com
0 comment

சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பார்த்த பின்பு பலரும் திரையில் தோன்றக்கூடிய சில்க் ஸ்மிதா காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வந்தனர். நடிகை சில்க் ஸ்மிதா ஓர் கவர்ச்சி  நடிகை என பலராலும் ஞாபகப்படுத்தப்பட்டாலும் அல்லது பிரதிபலித்து காட்சிப்படுத்தப்பட்டாலும்  அவர் திரையில் தோன்றக்கூடிய விதத்திற்கும், அவருடைய நிஜ வாழ்க்கை சிந்தனைக்கும் துளியளவு கூட சம்பந்தம் இருக்காது. ஆந்திராவில் பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் நீங்கள் தற்போது கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்கிறீர்கள்.

மிகப் பெரிய டாப் ஆக்டர்கள் கூட உங்களின் கால் சீட்டுக்காக காத்திருக்கும் சூழ்நிலை என்பது தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் நீங்கள் எதை நினைத்தாலும் செய்து முடித்து விட முடியும். நீங்கள் நினைத்ததை அடைய முடியும். இருப்பினும், இன்னும் நடக்காத  அல்லது நிறைவேறாத  ஆசை ஏதேனும் இருக்கிறதா ? என கேட்க அதற்கு பதிலளித்த அவர், 

தான் ஒரு நக்சலைட்டாக மாற ஆசைப்பட்டதாக தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிருபர்,  சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகையாக திகழும் ஒருவர் நக்சலைட்டாக மாற ஆசைப்படுகிறீர்களே அவர்கள் அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளிகள் என்பதை அறிந்து தான் பேசுகிறீர்களா ? என மறு கேள்வி கேட்க,  அதற்கு பதில் அளித்த அவர்,

அரசாங்கத்திற்கு பணிந்து நடக்கும் நம்மை விட, அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளிகள் சுதந்திரமானவர்கள் எனவும்,  மக்களுடைய தேவையை பூர்த்தி செய்ய முடியாமல்,  அவர்களை சமாளிக்க முடியாமல் இருக்கும் பலவீனமானவர்களே சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்.  சர்வாதிகாரம் எளிய மனிதர்களையும் ஆயுதம் தூக்க வைக்கும் அவர்களே நக்சலைட். நான் எளிய மக்களுக்கு ஆதரவாக நிற்க ஆசைப்பட்டேன் ஆனால் அதை என்னால் செயல்படுத்த முடியவில்லை. இதுவே என்னுடைய நிறைவேறாத ஆசையாக இருக்கிறது  என தெரிவித்திருந்தார். 

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.