டிரம்ப் ஆதரவாளர் அதிர்ச்சி….தேர்தல் களம் பரபரப்பு….!!!

அமெரிக்கா அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இதை அடுத்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். முன்னால் அதிபர் பார்க் ஒபாமா கமலஹரிஷ்க்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார் . மேலும் இவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கமலா ஹாரிஷ் பிரச்சாரத்தை தொடங்கிய ஒரு வார காலத்தில் 200 மில்லியன் டாலர் நிதியாக திரட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிதியில் 66% பேர் முதல்முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டது. முன்னதாக டெனால்ட் டிரம்ப்க்கும் கமலஹரிசுக்கும் தேர்தல் கருத்துக்கணிப்பு நடைபெற்றது. அதில் கமலஹாரிஸ் 2 சதவீதம் அதிகமாக வாக்குகளை பெற்றார். இது ட்ரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமெரிக்காவில் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!