டெனால்ட் டிரம்ப்-எலான் மஸ்க்…நேர்காணல் நிகழ்ச்சி…!!!

உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவரும் எக்ஸ்த்தலத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டெனால்ட் டிரம்ப்- ஐ நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த நேர்காணல் தொடங்கியுள்ளது. நேர்காணலில் பல கேள்விகளுக்கு ரெனால்ட் டிரம்ப் பதிலளித்தார். அவர் ஜோ பைடன் மற்றும் தற்போது அமெரிக்காவை ஆளும் குடியரசு கட்சியை கடுமையாக சாடினார் என கூறப்படுகிறது.

மேலும் தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடும் குறித்தும் தெரிவித்தார். அவர் அது தோட்டா என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது என்றும் அது என் காதை பலமாக தாக்கியது தெரிந்ததாக கூறினார். கடவுள் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன் இந்த விஷயம் குறித்து பரிசினை செய்ய துவங்குங்கள் என தெரிவித்தார். அந்த சூழ்நிலையில் துணிச்சலாக இருப்பது போல் நடிக்க முடியாது என்றும் அந்த சம்பவத்தை தொடர்ந்து நான் நலமாக இருப்பதை தெரிவிக்கவே உடனடியாக எழுந்து நின்றேன். அதற்கு அவர்கள் ஆரவாரம் செய்தனர் என்று கூறியுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!