Home செய்திகள் டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம்…இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது…!!!

டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை கூட்டம்…இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது…!!!

by Sathya Deva
0 comment

தமிழகம், கர்நாடகா, கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே காவிரி நீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக்குழு தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 33வது கூட்டம் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழகம் சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் ஆர்.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.