டெல்லியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு…. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு….!

டெல்லியில் இன்று காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 99 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது கர்நாடக தரப்பில் அணைகளுக்கு நீர் வரத்து 28 சதவீதம் குறைவாக உள்ளது எனவும் நீர் திறப்பது தொடர்பான முடிவுகள் ஜூலை 25ஆம் தேதி மேல்தான் கூறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது .

இந்த வாதத்தை கேட்ட தமிழக பிரதிநிதி கடந்த வருடம் போதுமான நீர் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் தற்போது கர்நாடகாவில் போதுமான நீர் உள்ளது எனவே தங்களுக்கு திறந்து விட உத்தரவு தர வேண்டும் என்று கூறியுள்ளார். இரண்டு மாநிலங்களின் வாதங்களை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஜூலை மாதம் முழுவதும் தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!