தாஜ்மஹால் உள்ளே காவிக்கொடி ஏற்றிய பெண்…பாதுகாப்பு படையினரால் கைது…!!!

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் பாஜக ஆட்சியில் சர்ச்சைக்குரிய இடமாக மாறி உள்ளது. தாஜ்மஹால் முன்பு ஒரு இந்து கோவிலாக இருந்தது என்றும் அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன என்று இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் நீண்ட காலமாக குற்றம் சாட்டி வருகின்றன. இவர்கள் தேஜோ மஹால் என்று முன்பு அழைக்கப்பட்ட இக்கோவில் முகலாய ஆட்சியில் தாஜ்மஹால் என மாற்றம் பட்டது என்றும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீப காலமாக தாஜ்மஹால் உள்ளே கங்கை நீரை தெளிப்பதும் ஓம் ஸ்டிக்கர்கள் ஒட்டுவது என வலதுசாரி இந்து அமைப்புகள் செய்து வருகின்றன. இதைத் தொடர்ந்து கடந்த வாரம் சிவபெருமான் கனவில் வந்து கூறியதாக கங்கை நீரை எடுத்து வந்து மீரா ரத்தோர் என்ற பெண் பூஜை செய்து தாஜ்மஹாலில் காவிக்கொடியை ஏற்றியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!