Home செய்திகள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….கருட சேவை…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்….கருட சேவை…!!!

by Sathya Deva
0 comment

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த மாதம் 2 நாட்கள் கருட சேவை நடக்கிறது. வருகின்ற 9 ம் தேதி கருட பஞ்சாமி மற்றும் 19ஆம் தேதி ஆவணி மாத பௌர்ணமி நாட்களில் கருட வாகனத்தில் எழுந்தருளி ஏழுமலையான் பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் புதுமண தம்பதிகள் கலந்து கொண்டு கருட பூஜை செய்தால் அவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதோடு கருடனைப் போல் வலிமையாக மற்றும் நல்ல ஆளுமையுடன் இருக்கும் குழந்தை பிறக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும் ஒரே மாதத்தில் இரண்டு கருட வாகன சேவை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 75,356 பேர் தரிசனம் செய்தனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.