தெலுங்கானா மாநிலம்….தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி…!!!

தெலுங்கானா மாநிலம்,சித்தி பேட்டை மாவட்டம், கஜ்வேல் நகராட்சியில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தது. பின்னர் நகர மன்ற தலைவர் ராஜமவுலி குப்தா தேசிய கொடியை ஏற்றினார். அப்போது தேசியக்கொடி தலைகீழாக பறப்பதை கண்ட அதிகாரிகள் நகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேசியக்கொடி கீழே இறக்கப்பட்டு மீண்டும் சரி செய்து பறக்க விடப்பட்டது.

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றி அவமாறியதை செய்த அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க சார்பில் கஜ்வேல் போலீசில் புகார் செய்தனர். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை சஸ்பெண்டு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

விமான சாகச நிகழ்ச்சி…துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவு…!!!

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி….பலத்த போலீஸ் பாதுகாப்பு…!!!

தமிழகத்தில் கனமழை…வானிலை ஆய்வு மையம்…!!!