தெலுங்கானா மாநிலம்…6 மாவோயிஸ்ட்களை போலீசார் சுட்டனர்…!!!

தெலுங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொதகுடம் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது சரமாரி துப்பாக்கியால் சுட்டனர். இந்த என்கவுண்டரில் 2 பெண்கள் உள்பட 6 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

போலீசார் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறைவிடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த இரு தினங்களுக்கு முன் சத்தீஸ்கரின் பீஜப்பூர் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப்படை நடத்திய என்கவுன்டரில் 9 நக்சலைட்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!