செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி… கோயம்பேட்டில் வைத்து மடக்கிய போலீஸ்…தீவிர விசாரணை…!! Revathy Anish29 June 202406 views சென்னை கோயம்பேட்டில் கட்டுமான பணி செய்து கொண்டிருந்த அனோவர் என்ற தொழிலாளியை போலீசார் திடீரென சுற்றி வளைத்து கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இவர் உபா சட்டத்தில் மேற்கு வங்காள காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி எனவும், இவர் கோயம்பேட்டில் இருப்பது தெரியவந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர் என தெரிவித்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இவரது கூட்டாளியான பயங்கரவாதி ஹபிபுல்லா கொடுத்த தகவலின் அடிப்படையில் அனோவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மேற்குவங்காள காவல்துறையினர் அனோவரை கொல்கத்தா அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர்.