தொழில் நஷ்டத்தால் தற்கொலை…. மகனின் கடைசி வீடியோ கால்….!!

மும்பையில் காட்கோபரில் பவேஷ் சேத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் பேரிங்ஸ் வியாபாரம் செய்து வருகிறார். அவர் பாந்த்ரா ஒர்லி பாலத்தில் தென் பகுதிக்கு வந்து மகனுக்கு வீடியோ கால் செய்து குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் படி மகனிடம் கூறியுள்ளார். மேலும் தொழிலின் ஏற்பட்ட கோடிக்கணக்கான நஷ்டத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்யப் போகிறேன் என கூறிவிட்டு பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரது மகன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு மீட்புத்துறை வீரர்களுடன் வந்து 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பந்த்ரா போலீஸ் சார் கூறுகையில் “இறந்தவரின் மகன் மாலை 4:30 மணியளவில் எங்களை அணுகினார்.அவர் வாட்ஸப் வீடியோ காலில் தந்தை அழைத்ததையும், கடலில் குதித்த சம்பவத்தையும் தெரிவித்தார்” என கூறுகின்றார். இது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!