Home செய்திகள்அரசியல் செய்திகள் தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் – தேமுதிக விஜய பிரபாகரன்

தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும் – தேமுதிக விஜய பிரபாகரன்

by Inza Dev
0 comment

நடைபெற்று முடிந்த 18 வது நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் முதன் முறையாக போட்டியிட்டார். ஆனால் அவர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸிடம் தோல்வியுற்றார். இந்நிலையில் தேர்தல் முடிந்து ஒரு மாதம் முடிந்த நிலையில் விருதுநகரில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு விஜய பிரபாகரன் நேற்று முன் தினம் நன்றி தெரிவித்தார்.

அப்போது பேசிய அவர் “சூழ்ச்சி துரோகத்தால் தோற்கடிக்கப்பட்டதால் கோபமும் ஆதங்கமும் உள்ளது. தோல்விக்கான காரணம் கடவுளுக்கு தான் தெரியும். என்னுடைய தோல்வியை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சாரமாக பார்க்கிறேன்” என கூறினார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.