Home » “நான் செய்யும் குறும்புத்தனங்களை பார்த்து அவள் மகிழ்ச்சியடைவாள்”…. நடிகர் ஷாருக்கான் பதிவு வைரல்….!!!!!

“நான் செய்யும் குறும்புத்தனங்களை பார்த்து அவள் மகிழ்ச்சியடைவாள்”…. நடிகர் ஷாருக்கான் பதிவு வைரல்….!!!!!

by dailytamilvision.com
0 comment

டைரக்டர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் “ஜவான்”. பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிய இதில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ரூ.1000 கோடியை நெருங்கி உள்ளதால் இந்த வெற்றியை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தன் சமூகவலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அதில் ஒரு நபர், ஜவான் திரைப்படத்தின் கடைசி பாடலை பகிர்ந்து “ஹேய், விக்ரம் ரத்தோர், நீ ஆசாத் மற்றும் பெண்களுடன் மகிழ்ச்சியாக உள்ளதை ஐஸ்வர்யா சொர்க்கத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவருக்கு என்ன பதில் சொல்லுவாய்? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஷாருக்கான் பதிலளித்ததாவது, “நான் மிகவும் ரொமாண்டிக் மற்றும் மனதளவில் பெண்களுக்கு அதிக மதிப்பு கொடுப்பவன் என அவளுக்கு தெரியும். இதற்கிடையில் நான் செய்யும் குறும்புதனங்களால் அவள் மகிழ்ச்சியடைவாள். எனவே நீங்களும் மகிழ்ச்சியாக இருங்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த பதிவு தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.