“நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்பாக இருப்பாங்க”…. வித்தியாசமான மனு கொடுத்த முதியவர்…. பரபரப்பு….!!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடந்தது. இந்நிலையில் கலெக்டரிடம் லால்குடி அருகேயுள்ள பெருவளப்பூரை சேர்ந்த தமிழரசன்(65) மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவை வாங்கிய கலெக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் அந்த மனுவில் இருப்பதாவது, நான் பெருவளப்பூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். 20 வருடங்களாக நாட்டிலுள்ள தெய்வங்களுடன் நான் பேசி வருகிறேன்.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு என் கனவில் பேசிய தெய்வங்கள், நீதான் அடுத்த ஜனாதிபதி ஆக வேண்டும். நாட்டின் அடுத்த ஜனாதிபதி ஒரு ஆண் தான் ஆகவேண்டும். நான் ஜனாதிபதி ஆனால் தான் மக்கள் செழிப்போடு இருப்பார்கள் என தன்னிடம் தெய்வங்கள் அனைத்தும் கையெழுத்து வாங்கி இருக்கின்றன. இதனை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கு அனுப்பவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து கலெக்டர், நான் மனுவை அனுப்புகிறேன் என தமிழரசனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!