Home செய்திகள் நீட் நுழைவு தேர்வு…13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!!

நீட் நுழைவு தேர்வு…13 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்…!!!

by Sathya Deva
0 comment

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 23 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இந்த நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்னதாக பிகார் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது தெரிய வந்தது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் ஆள்மாராட்டம் மற்றும் மோசடிகள் நடைபெற்றது தெரியவந்தது.

இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சிபிஐக்கு விசாரணை மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் பலரை சிபிஐ கைது செய்தது. அதில் 13 பேர் மீது தற்போது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.