சினிமா செய்திகள் தமிழ் சினிமா நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படத்தில் கமிட்டாகும் அஷ்வின் குமார்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu14 July 2024070 views விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின் குமார். இந்த நிகழ்ச்சியில் பிரபலமான இவருக்கு சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘என்ன சொல்லப் போகிறாய்’ என்ற படத்தின் மூலம் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து இவர் செம்பி என்ற படத்தில் நடித்தார். இந்த திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவர் இயக்குனர் விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் ‘நொடிக்கு நொடி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.