நேபாளத்தில் விமான விபத்து…18பேர் பலி

நேபாள நாட்டில் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து போக்கார புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் போக்ராவுக்கு செல்ல டேக் ஆஃ ப் ஆகும்போது விபத்தில் சிக்கியது.

இந்த விமானத்தில் ஊழியர்கள் உட்பட 19 பேர் இருந்தனர் என கூறப்படுகிறது.இதில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர்கள் விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைகளில் மீட்புபணியில் ஈடுபட்டு வருகின்றன என கூறப்படுகிறது.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!